என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீப்பெட்டி தொழிற்சாலை"
- பணியாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
- தீ விபத்து சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான காவியா தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இன்று காலையில் வழக்கம் போல் தொழிற்சாலையை திறப்பதற்காக அதன் ஊழியர் ஒருவர் அங்கு சென்றார்.
தொழிற்சாலையை திறந்து உள்ளே சென்றபோது தீக்குச்சிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக தீப்பொறி நெருப்பும், புகையும் மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது தெரியவந்தது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமானது.
தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்தில் உள்ளே இருந்த தீக்குச்சிகள் மற்றும் தீக்குச்சிகள் அடைக்கும் பெட்டிகள் எந்திரங்கள், மின் சாதன பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.
பணியாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்